Monday, July 27, 2009

நாம் இலங்கையர்கள் தானே

சற்று ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் முகம் தெரியாத நண்பர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பின்வரும் மின்னஞ்சலும் அதன் இணைப்புப் பிரதியும் எனக்குக் கிடைத்தது. சில வேளை இந்த மின்னஞ்சல் உங்களிற்கும் வந்திருக்கலாம். தனிப் பட்ட மற்றும் சில கள செயற்பாடுகளிற்காக இலங்கையின் பிற இடங்களில் தொடர் பிரயாணத்தில் இருந்த மையால் இதுபற்றிய கவனயீர்ப்பினை மேம்படுத்த முடியவில்லை. காலம் கடந்து விட்டதாயி னும் இவ்விடயத்தினை இங்கு வலையேற்றம் செய்கிறேன். முடியுமானவர்கள் இதுபற்றிய உரையாடலினைத் தொடரலாம். ஆனால் நம்மீது கவிழ்ந்திருக் கும் ஒரு அலட்சியம்தான் வெறுமனே வாசிப்பது.

அன்புடன்,
பர்ஸான்.ஏஆர்
________________

முகம் தெரிந்த, தெரியாத அனைத்து உள்ளங்களையும் இம் மடலின் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி,

அதிசயமாக இருக்கலாம். யார் இவ்வாறான ஒரு ஆரம்பத்துடன் என்னை அழைக்கின்றனர் என்று,!

நிச்சயமாக நாமும் அப்படித்தான். சில விடயங்களை கதைக்க வேண்டிய தேவையிருப்பதன் காரணமாக இந்த மின்னஞ்சலின் ஊடாக சந்திக்க வேண்டியதாகிற்று.

உங்களின் பரபரப்பு நிறைந்த சூழலிற்குள் சற்று நேரம் ஒதுக்கி, நமதும் நம்மக்களினதும் வாழ்க்கை பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் செயலாற்ற வேண்டிய தேவையிருப்பதை நீங்கள் புறமொதுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை நிறையவுண்டு.

இந்த நோக்கத்துடன் மிகத் திறந்த உரையாடலினு}டாய் நம் மக்களின் வாழ்விற்கு நாம் பங்காற்ற வேண்டிய தேவை இன்று நம்முன் பெருங்கேள்விகளுடன் எழுந்து நிற்கின்றது. போர் போர் என்ற கூச்சல்கள் ஓய்ந்து விட்டன. இனியும் இந்த போர்ப் பேய் நம்மைத் தொற்றாமல் இருக்கட்டும்.

இந்த வகையில் உள்நாட்டு அல்லது இனப் போருக்குப் பின்னைய இலங்கையின் நிலவரங்களில் நமது பங்காற்றலை வலுப்படுத்தும் நோக்குடன் இங்கு உரையாடல் ஒன்றினை ஆரம்பித்து வைக்கிறோம். தயவு செய்து இலங்கையில் இ;ன்னுமொரு போர் ஏற்படாமல் இருக்க மக்கள் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கும் நமது இந்த முயற்சிக்கு உங்களின் கருத்துக்களுடன் கூடிய பங்களிப்பினை நிச்சயமாக வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த மின்னஞ்சலினை பரவலாக்கியும் இது பற்றிய உரையாடலினை வளப்படுத்தவமும் நீங்கள் எடுக்கும் முயற்சி நமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கு நிச்சயமாக பெரும் உதவியாகவிருக்கும்.

தனிப்பிரதியாக நீங்கள் கூறும் கருத்துக்களை தயவு செய்து அனைவருக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்.

எந்த அமைப்போ கட்சியோ சாராமல் நாம் எடுக்கும் இந்த முயற்சி எதிர்கால இலங்கையன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது என்பதில் இரு கருத்துகள் கிடையாது.

இலங்கையின் அமைதியையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க இலங்கையர்களாகிய நம்மால்தான் முடியும். நாம் அனைவரும் இணைந்துதான் நம் மக்கள். நம் மக்களின் வாழ்வினை நாமன்றி வேறு யார் பேசமுடியும்.

அந்த மகத்தான நம்பிக்கைகளுடன்,
புதிய இலங்கையர்கள்.

நாம் இலங்கையர்கள் தானே

நமது பாசத்துக்குரிய பிறந்த மண்ணான இலங்கையில் அரேங்கேறிக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் நாடகங்களையும் நீங்கள் எங்களைப் போல அல்லது அதைவிடக் கூடுதலாக அறிந்து கொண்டிருப்பீர்கள். நமது இலங்கையினுள் இருக்கும் தோழர்கள் ஒவ்வொரு கணமும் இந்த நாடகங்களின் போலியை, திறந்த வெளிச் சிறையை அனுபவத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இதன் கொடூரம் என்னவெனில் நம் நாட்டிலிருந்து நமக்கான அரசியல் பற்றிய நியாயமான பார்வைகளை முன்வைத்துக் கொண்டிருந்த பல நண்பர்கள் இன்று மௌனிகளாகி விட்டனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு அங்குள்ள கள நிலைமைகளை கேட்கின்ற போது அவர்களிடமிருந்து எந்த காத்திரமான பதில்களோ முயற்சிகளோ வெளிவரவேயில்லை. இந்த தேக்க நிலையினையினையும் அதன் வலிகளினையும் நாம் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறோம்.

இதற்கு இன்று அங்குள்ள சூழலும் அரசு ஏற்படுத்தியிருக்கிற பயங்கரவாதத்தின் கொடூரம் நிறைந்த அச்சமுமே காரணமாகும். எதையும் வெளிப்படையாக கதைக்கவோ எழுதவோ முடியாத மிக மோசமான வன்முறை மறைமுக வடிவில் பல குழுக்களால் இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறன.

புலிகளில் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளில் அறவே நம்பிக்கையிழந்த பலர் நம்மிடையே இருக்கிறோம், இருக்கின்றனர். ஆனால் புலியின் துப்பாக்கியினாலும் அல்லது இதர தமிழ் அரசியல் கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொண்டு மக்களிடம் கப்பம் அது இது என வன்முறையில் ஈடுபட்டுத் திரியும் குமபல்களின் துப்பாக்கினாலும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வன்முறை எதையும் கதைக்காமலே இருந்து விட பெரும் பங்காற்றிற்று. புலிகளின் இராணுவ ரீதியான வீழ்ச்சிக்குப் பிறகும் இந்த மௌனம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதினை மறைத்துக் கொண்டு நம் அரசியலினை கதைக்க முடியாது.

இதே போல, நமது முஸ்லிம் மக்களின் நிலையும் இருட்டுக்குள் கருப்பு மணியைத் தேடுவதாகவேயுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம் கேவலமான சுய நலத்திற்காய் மஹிந்தவினதும் ரணிலினதும் காலடியில் எழும்புகளை நக்கிக் கொண்டு கிடக்கின்றன. மக்கள் அரசியலின் எந்தவொரு போராட்ட வழிமுறைகளும் அற்ற இந்த எழும்பு நக்கிகளின் அரசியல் வாழ்வின் பெரும் பகுதி எங்கு பத்து ரூபாய் கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து வாய் கூசும் நடவடிக்கைகளை எவ்வித அசிங்கமும் இல்லாமல் அரசியல் சாயத்துடன் செய்து கொண்டே வருகின்றனர். அஷ்ரப் அரசியலை மூலதனமாக்கிக் கொண்டு எழும்பு நக்கும் அனைத்து அரசியல் நுட்பங்களை யும் நன்றாக கற்றுத் தேர்ந்த இந்தக் கும்பலும் பேரினவாதத்தின் வருடிகளாகவே வாழ்ந்து மடிந்து கொண்டிருக் கும் மற்றொரு குழுவும் தம் ஆதிக்கத்தினை இன்னமும் முஸ்லிம் அரசியலில் பலமாகவே வைத்துள்ளனர்.

இந்த ஆரோக்கியமற்ற போக்கிற்குள் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலே நமது மக்களின் பெரும்பாலான வாழ்க்கை நிறைவடைந்து கொண்டிருக்கிறது. நாம் நம்பியிருந்த அரசோ, இயக்கங்களோ, கட்சிகளோ தலைமைகளோ சக்தியும் அறிவும் அற்றவையென்பதுதான் இறுதியில் புரிந்து கொள்ளப்பட்ட உண்மை. நம்மிடம் இருக்கும் அரசியல் யதார்த்தினை புரிந்து கொள்ள மறுக்கும் தலைமைகளும் மக்களிடம் சென்று அரசியல் சமுகவியலை எடுத்துச் சொல்ல பலமற்ற குழுக்களுமாகவே நம் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிக அபுர்வமாக அரசியல் சமுகவியலின் பின்ணனியோடு நேரடி அரசியலுக்குள் ஒரு சிலர் வந்தாலும் குறுகிய காலத்தினுள்ளே அவர்களையும் அரசியல் கேவலத்தின் கரங்கள் மிக லாவகமாகப் பற்றிக் கொள்கின் றன. இவ்hவறு நீண்டுகொண்டே செல்கின்ற நம் கேடுகெட்ட அரசியலின் போக்கினை இன்னும் விபரித்துக் கொண்டிருப்பது நம்மீதான பொறுப்புக்களை மேற்கொள்வதில் பின்னடைவுகளையே ஏற்படுத்திக் கொண்டிருக் கும்.

ஆக, நம் முன் இருப்பது நம் மக்களிற்கான அரசியலை மிக வெளிப்படையாக உரையாடுவதே. நம்மை ஆட்கொண்டிருக்கும் அச்சத்தின் விளைவாக பல விடயங்களை நாம் கதைக்காமலே இருந்து கொண்டிருக்கி றோம். இந்த இடைவெளியை நாம் விட்டுக் கொண்டிருப்பதால் நன்மையடைவர்கள் யார் என்பதும் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். ஆம் அவர்கள்தான் நம் கேவலமான அரசியல் தலைமைகள். வன்முறைக்கும் அநாகாPகத்திற்கும் பயந்து நாம் விடும் இந்த இடைவெளியை நிறப்பும் இந்த வன்முறையாளர்கள் அவர்களின் போக்கிலே நமது மக்களையும் நமது மகத்தான வாழ்வினையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி யென்றால் இந்த சூறையாடல்களிற்கு நாமும் காரணம்தானே. நமது மக்களின் வாழ்வினையும் அவர்களின் அமைதியினையும் நமது பிறந்த மண்ணில் இன்னமும் இரத்தம் சிந்துவதற்கும் நாமும் ஒரு காரணகர்த்தாக்களாக இருக்கிறோமல்லவா??

எனவேதான், நமது மக்களின் பெயரால் இந்த வேண்டுகோளினை இங்கு முன்வைக்கிறோம். நமக்கான அரசியலை நாம் விவாதிப்போம். நமது நீண்ட விவாதங்கள் நமது இலங்கையில் புதிய அழகிய வாழ்வை உருவாக்கக் கூடியது என்ற நம்பிக்கைகளுடன் உரையாடுவோம்.

இலங்கையில் இருந்து கொண்டு கதைக்க முடியாத விடயங்களை வெளிநாட்டில் இருந்து கதைக்க முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. நாம் யாருக்காக கதைக்கிறோம். நம் நாட்டுக்காகவும் நமது மகத்தான மக்களுக்காக வுமே. அனைவரும் கூடி நமக்கான அரசியல் தேவையினையும் நமது மக்கள் இன்று பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளையும் கொடுமைகளையும் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சொல்லொன்னா வலிகளையும் இந்தத் தளத்தில் வெளிச்சத்துக் கொண்டுவருவோம்.

மனித உரிமைப் பேரவையில் தன்னைக் காப்பாற்றி;க் கொள்ள சிங்கள அரசு தீர்விற்கான நகல் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் என்ன வகையான நகல் தாக்கல் செய்யப்பட்டது என்ற விடயம் யாருக்குமே தெரியாது. இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இ;ந்த நிமிடம் வரை அது பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. 17 பந்திகளைக் கொண்ட இந்த தீர்வுத் திட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அவை 21 பந்திகளாக மாற்றப்பட்டதாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. அப்படியாயின் தன்னை போரியல் குற்றங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள சிங்கள இனவாத கொடுங்கோள் அரசு எதனை தீர்வாக முன்வைக்கப்போகின்றது என்ற அச்சம் மீளவும் நம்மை ஆட்கொள்கிறதல்லவா?.

இன்னும், மணிக்பாப் முகாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலியல் உட்பட அனைத்து வகை வன்முறைகளிற்கும் எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இது மட்டுமன்றி யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட மற்றும் புலிகளினால் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பிற்குள் ளான முஸ்லிம் மக்களினை கௌரவமாக மீளவும் குடிNயுற்ற வேண்டிய வரலாற்றுத் தேவையின் காலம் நம் முன் நிற்கிறது. இது பற்றிய நீண்ட உலையாடல்கள் அவசியமாகின்றன. மீளவும் சொந்த மண்னில் குடியேற்றும் விடயத்தில் மிகவும் முனைப்பாக நாமனைவரும் இருக்காதவிடத்து துரத்தப்படட்ட நமது மக்களினை மீளவும் அழிவுக்குள்ளாக்கும், அரசியல் சுதந்திரத்தினை காவு கொள்ளும் செயற்பாட்டையே நாம் செய்தவர்களாக மாறிவிடுவோம்.

இவ்வாறு நீண்டு செல்லும் நமது வாழ்க்கை பற்றிய உரையாடலினை நாமாக இணைந்து விவாதிக்கவும் அதிலிருந்து பல அழுத்தங்களை அதிகாரத் தரப்பிடம் முன்வைக்கவும் வேண்டிய காலகட்டம் இது என்று கருதுகிறோம். ஆகவே, இந்த வெளிப்படையான உரையாடலில் இணைந்து கொண்டு யதார்த்தமான வழிமுறைகளினு}டாய் நமது மக்களின் வாழ்வினையும் நமது இலங்கையின் அரசியலினையும் கொண்டுசெல்ல உங்களின் மகத்தான பங்களிப்புக்களை வெளிக்கெணருமாறு வஞ்சிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்களின் சார்பாய் வேண்டுகிறோம்.

நமது மக்களின் மனிதாபிமான விடயங்களில் இலங்கையரல்லாத பலர் உளத்து}ய்மையுடன் இயங்கியது நமக்கு நன்றாகத் தெரியும். அந்த உள்ளங்களும் இந்த உரையாடலில் பங்கெடுக்க வேண்டும் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம். அநீதி இழைக்கப்பட்டவர்களிற்காய் கதைப்பதும் வாழ்வதும் மிகப் பெரிய தர்மம் மட்டுமல்ல மனித வாழ்வின் இன்பமும் அதுதானே.

நம்பிக்கைகளுடன்
புதிய இலங்கையர்கள்.